Tuesday, June 15, 2010

..சசிவர்ணம் சதுர்ப்புஜம்....








நீங்கள் யூகித்திருப்பீர்கள், இதற்கு யார் உதவுகிறார்கள் என்று.வியாசர் சொல்லுவதை விநாயகர் எழுதின மாதிரி (நான் சொல்லுவதை நானே எழுதும் காலம் வரை) இன்னொருவர் எழுதுவார்.வியாசர் மாதிரி வேகமாக சொல்ல இயலாது. அதனால் பிள்ளையாரும் எழுத்தாணி முறிந்து போனால் கொம்பை உடைக்க வேண்டியதிருக்காது..
கே.எஸ் ரவிக்குமார் சினிமாவில் அவரே வருகிற மாதிரி வியாசர் கதையில் வியாசரே ஒரு பாத்திரமாக அடிக்கடி வருவார்.அம்பிகாவுக்கும் அம்பாலிகாவுக்கும் கர்ப்பதானம் செய்வார். நீதி உரைப்பார். கே.எஸ்.ரவிக்குமாருக்கு முன்னாலேயே ஸ்ரீதர், ஹிட்ச்காக் எல்லோரும் தங்கள் படத்தில் வருவார்கள்.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் ஸ்ரீதர் நிழல் உருவில் வந்து கல்யாண்குமாரிடம், உங்கள் அம்மா வந்திருக்கிறார்கள் என்று சொல்லுவார் . அதே போல் இதன் இயக்குநரும் பட்டும் படாமலும் இடுகைகளில் தலை நீட்டுவார்.
இப்போதைக்கு இது போதும்.

1 comment:

  1. எதற்கும் முன்னால் பிள்ளையார்பூஜையோடுதான் பூர்வாங்கம் துவங்கும்.சசிவர்ணம் சதுர்புஜத்துடன் கலாப்ரியாவின் கவிதைத் தலைப்போடு துவக்குகிற இந்த வலைப்பூ நிழல் தரும் மஹாவிருக்ஷமாக மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete